கழிப்பிடத்திற்குள் நுழைவதற்கு முன்
بِسْمِ اللّٰهِ ، اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ.
**பொருள்:** அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
**ஹதீஸ்:
- அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கழிப்பிடத்திற்குள் நுழையும் போது 'பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறுவது, ஜின்களின் பார்வைக்கும் ஆதாம் மக்களின் அவரங்களுக்கும் இடையேயான தடையாகும்." (திர்மிதீ: 606)
கழிப்பிடத்திலிருந்து வெளியே வந்த பிறகு
**غُفْرَانَكَ.**
**குஃப்ரானக்.**
**உன்னிடம் மன்னிப்பு தேடுகிறேன்.**
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளியே வரும்போது இவ்வாறு சொல்லுவார்கள்: [மேலே உள்ளது]. (அபூ தாவூத் 30)
ஒழு செய்யும்போது முதலில் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்கவும்.
கீழே உள்ள ஒரு துஆ ஆண்களுக்கு
குறிப்பாக தாடி வைத்திருப்பவர்கள் .
தாடியின் வழியாக விரல்களை நீட்டும்போது
هَـٰكَذَا أَمَرَنِيْ رَبِّيْ عَزَّ وَجَلَّ.
ஹகதா அமரானி ரப்பி ‘அஸ்ஸா வஜல்
என் இறைவனால் நான் கட்டளையிடப்பட்டிருப்பது இதுதான் - அவன் உயர்ந்தவனும் மகா கண்ணியம் மிக்கவனுமாக இருக்கிறான்.
அனஸ் பி. மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது, ஒரு கைப்பிடி தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள். பின்னர் அதைத் தம் தாடியின் கீழ் வைத்து, தாடியின் வழியாகக் கடந்து செல்வார்கள்: [மேலே].” (அபு தாவூத் 145, பைஹக்கி 250)
வுதூவை முடித்த பிறகு #1
அரபி:
أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورَسُوْلُهُ ، اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ ، وَاجْعَلْنِيْ مِنَ المُتَطَهِّرِيْنَ.
தமிழ் பொருள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அவன் ஒருவனே, அவனுக்கு எவரும் இணையில்லை. மேலும், முஹம்மது (ஸல்) அவனது அடியாரும் தூதருமென நான் உறுதியாகக் கூறுகிறேன். இறைவா! என்னை தவபாவிகள் (பாவமன்னிப்பு வேண்டுவோர்) கூட்டத்தில் சேர். மேலும், என்னை தூய்மைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவனாக ஆக்குவாய்.
ஹதீஸ்:
ரபீஆ பின் யஸீத் அத்-திமஷ்கீ, அபூ இத்ரீஸ் அல்-கவ்லானீ மற்றும் அபூ உஸ்மான் (ரஹ்) ஆகியோர் உமர் பின் அல்-கத்தாப் (ரலி) மூலம் அறிவிக்கிறார்கள்:
**நபி (ஸல்) கூறினார்:**
"யார் ஒருவர் முறையாக வுதூ செய்து, பின்னர் இவ்வாறு பிரார்த்திக்கிறாரோ (மேலே குறிப்பிடப்பட்ட துஆ), அவருக்கு சொர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படும். அவர் விரும்பிய வாயிலின் வழியாக (சொர்க்கத்தில்) நுழையலாம்." (திர்மிதீ: 55)
உளூ #2 முடித்த பிறகு
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ ، أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا أَنْتَ ، أَسْتَغْفِرُكَ وأَتُوْبُ إِلَيْكَ.
மகிமை மிக்க அல்லாஹ்வே! உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன். உன்னிடம் மன்னிப்பு தேடி, உன்னிடமே தவ்பா (மனந்திரும்புதல்) செய்கிறேன்.
ஹதீஸ்:
அபூ சயீத் அல்-குத்ரீ (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூறியதாவது:
"யார் உளூ செய்து (மேலுள்ள துஆவை) சொல்கிறாரோ, அது ஒரு சுருளில் எழுதப்பட்டு, முத்திரையிடப்படும். மேலும் கியாமத் நாள்வரை அந்த முத்திரை உடைக்கப்படாது."
(நஸாயீ - அமல் அல்-யவ்ம் வல்-லைலா 81, தபரானீ - அத்-துஆ 388)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நபி ஸல் அவர்களின் வழிமுறை முறையாக சரியாக பின்பற்றும் கூட்டத்தில் சேர்ப்பானாக ! ஆமீன்
Comments
Post a Comment
welcome to your comment!