கடனிலிருந்து விடுபட துஆ..
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்.
பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக.
ஆதாரம் : திர்மிதி
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
ஆதாரம் : புகாரி
கடன் கொடுக்கும்போது அவருக்காக துஆச் செய்தல்*****
بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ
பாரகல்லாஹு லக ஃபீ அஹ்லிக வமாலிக
பொருள் : அல்லாஹ் உமது குடும்பத்திலும் உமது செல்வத்திலும் அபிவிருத்தி செய்வானாக!.
ஆதாரம் : நஸஈ, இப்னுமாஜா
Comments
Post a Comment
welcome to your comment!